1/21/13

நண்பன்.


 
சண்டையிடாத ,
கோவபடாத ,
கொஞ்சல் , கெஞ்சல் இல்லாத நண்பன்.
என் நண்பனின்
பெயர்  தனிமை......

12/23/12

நினைவு


விட்டு கொடுத்தலில்
என் தோழி தான் முதல்.......
நினைவுகளை
மட்டும் விட்டு
கொடுத்து ..
என்னை விட்டு
சென்று விட்டாள் ........

ஜி.ஜி ............

12/18/12

நட்பும், காதலும்


பாசம் 
ஒருவருக்கு ஒருவர்
அன்பு செலுத்துதல், செல்லமான 
கொஞ்சல்கள், கெஞ்சல்கள்
அதிகமாக இருக்கும். 
நெருங்கிய நட்பிற்கும் , 
காதலுக்கும் அன்பு ஓன்று தான்.

****************************************************




சண்டை 
சில சில
செல்ல சண்டைகள்
திமிரான பேச்சுக்கள்
அதிகமாகவும் குறைவாகவும் 
நட்பிலும் காதலிலும் 
சண்டைகள் காணப்படும். 
***************************************


கோபம் 
அளவுக்கு அதிகமான 
அன்பும்,பாசமும்
வைக்கும் போது
கோபம் என்ற மூன்றாவது
நேசமும் 
சேர்ந்துகொள்கிறது 

*********************************************



உணர்வு

சில நேரங்களில் 

பேசி கொள்ளாத போது 

இரண்டு உள்ளங்களும் 

மௌனத்தால்

உணர்வுகளால் பேசிக்கொள்ளும் 

இது நட்பிலும் 
காதலிலும் மட்டும் உண்டு.
*****************************************


நம்பிக்கை

வாழ்க்கை நம்பிக்கையின்

மையத்தில் இருந்து சுழன்று வருகிறது.

ஒருவர் மீது வைத்த நம்பிக்கையை

இழந்தால்? மீண்டும் அவர் மீது

அதே நம்பிக்கை வைக்க முடியாமல் போகும். 

இது நட்பிற்கும் காதலுக்கும் ஓன்று தான்.
************************************************


பிரிவு 

பார்க்க, பேச முடியாமல்  

சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும்.

மீண்டும் பார்த்து பேசும் வரை

ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு 

உறுத்திக்கொண்டே இருக்கும்.

இது இரண்டிற்கும் பொதுவானவை .
************************************************


பகிர்வு
சின்ன சின்ன சந்தோசங்களை
பகிர்ந்துகொள்ள துடிக்கும்.
பகிர்ந்து கொள்ளும் வரை
மனதில் பெரிய கனம்  இருப்பதாய்  உணர்த்தும்.
பகிர்ந்து கொள்ளும்போது தான்
இரட்டிப்பு ஆகும்.இது இரண்டிற்கும் 
பொதுவானவை .


*********************************************


கஷ்டம் 

இரண்டு உள்ளங்களிலும் 

தனிப்பட்ட கஷ்டங்கள் இருக்கும்.

அதைபகிர்ந்து கொள்ளும் கனம் 

 குறைந்த உணர்வு. 
இது இரண்டிற்கும் பொதுவானவை .
**************************************************



மகிழ்ச்சி 

இருவருக்கும் 

சில சில சண்டைகளில் 

சிலமணி நேரங்கள் முதல் 
பல நாட்கள் வரை 

மௌனமாய் நட்பு பயணிக்கும். 
சந்தோஷமான தருணங்களை 
நினைத்து பார்த்தல் மகிழ்ச்சி பொங்கும்.
இது இரண்டிற்கும் பொதுவானவை.
**************************************************




விட்டுகொடுத்தல்

இது இன்றியமையாத 

ஒவ்வொருக்குள்ளும் 

இருக்கவேண்டியவை.

விட்டுகொடுத்தல்  உன் உயிர்

தோழி/தோழனிடம் தானே.

இது இரண்டிற்கும் பொதுவானவை.
*********************************************************




வேறுபாடு 

இரண்டும் ஒன்றி போனாலும் 

இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

புரிதல் என்ற ஒரு சிறு நூலிழையை 

புரிந்துகொண்டால் 

நட்பிற்கும் காதலுக்கும் 

வேறுபாடு தெரியும்.
*****************************************************

(என்றும் என் நட்பிற்காக ......18.12.2012)    




8/19/11

உலக கவியே .....



எங்கள் தோழரின் பெயர் .பார்கவி.இவர் கர்நாடகத்தில் பிறந்தவர். தற்போது சென்னை ஆவடியில் இருக்கிறார். இவரின் பிறந்த தினம் ஆடி மாதம் 27(ஆகஸ்ட் 12 ). இவர் எங்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் அறிமுகம். அவ்வாண்டு அவர் பிறந்த தினத்திற்கு (நானும்,தோழர்.ஜீநா) எழுதிய வரிகள் கீழே ...

உலக கவியே .....

எங்கள் பாட்டனாம்
பாரதத்தில் அக்னி குஞ்சுகளை
பரப்பினான் பாரதி.
நீ - எங்கள் பாரதத் ''தீ''..


மகா கவி மூலம்
கண்ட புதுமை பெண் - நாங்கள்

பார் கவியாய் காண்கிறோம்.
''சட்லஜ்'' நதிக்கரையில்
விதைக்கப்பட்ட விதையின்

சிதறல் நீ....
.

கன்னடம் தோன்றி

தமிழகம் வரும் - புது

காவிரி தோழி நீ...

காவிரி கண்டு

ஆவடி கொண்ட - எங்கள்

ஆடி காற்றும் நீ...

உன் போர் சூறாவளி
கண்டு கலங்க போவது - ஏழைகளன்று
ஏகாதிவாதிகளே....

எதிரிகளுக்கு சூறாவளியாகவும்
தோழர்களுக்கு சுவாச காற்றாகவும்

விளங்கும் எங்கள் கவியே....

பார் கவியே ...

பல நூறு ஆடிகள்
காண
வாழ்த்தும் ...

கவியின் இரு கரங்கள்..
G.J.கோபிகவிகுமார்..

4/30/11

காகித நீர்

நான் இறந்த பிறகும்,
என் உடலை பார்க்க
அவளை அனுமதிக்காதீர்.

அவள் அங்கேயும் வந்து

காகித நீர் பூக்களை
உதிர்த்து விட்டு செல்வாள்.

ஜீ.ஜீ ...தி.கோடு.

12/12/10

அன்புத்துளி

என் பெற்றோர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் உறவினர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் நண்பர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் அருகாமை வீட்டுகாரர்களிடமும்
கேட்க வேண்டாம்.
என் தலையணையிடம்
மட்டும் கேட்டு பார்.
அது சொல்லும் உனக்கான அன்பை.
அனுதினமும் அன்பை துடைத்து
கொண்டிருப்பது அதுதானே.
ஜி.ஜி..தி.கோடு

10/9/10

ஆதரவு

பார்க்க ,பேச வேண்டாமென
செவிகளில் ஆழமாய் அறைந்தாள்.எனக்கு
துணையாக நின்றது .பேருந்து நிறுத்த தூண்கள்
மறைந்திருந்து பார்ப்பதற்கு.
ஜி.ஜி...தி.கோடு.

4/1/10

விழி நீர்..

கனவில்
உன் கண்களில் ஒரு துளி நீர்
தலையணையை நனைத்தது-எனது
விழி நீர்.

ஜி.ஜி.... தி.கோடு.

3/26/10

மழை

இன்றாவது முத்தம்

தருவாயா என்று ஏக்கத்தொடு

பூமியும், ஏழையும்.

ஜி.ஜி.தி.கோடு.

தவிப்பு..

உன் வட்ட (முக) நிலவுக்குள்
நான் - வெளியே
வர முடியாமல்.
ஜி.ஜி.... தி. கோடு.

3/8/10

பார்வை..

வார சந்தை
சத்தம் இலலாமல் நடக்கிறது.
பார்வை பரிமாறல்கள்.
க.கோபி.. தி. கோடு..

ஹைக்கூ..(மாப்பிள்ளை)

மகளுக்கு படித்த மாப்பிள்ளை
தேடினார்கள் . தன் பையனை
தார் போட அனுப்பிவிட்டு.
.கோபி ..தி.கோடு

ஹைக்கூ ..(மூக்குத்தி)

நிலவுக்குள்
நட்சத்திரம் - என் அன்பியின்
மூக்குத்தி.
.கோபி ..தி.கோடு...

1/4/10

ஹைக்கூ ....3

வெள்ளை புடவை
சகுனம் பார்த்தான். தன் மனைவியின்
நினைவிடத்திற்கு செல்லும் பொது
.கோபி தி.கோடு...

10/6/09

தீண்டாமை

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம். பின் ஏன்?
கடவுள்கள் கோயிலுக்குள்
செல்வதை தடுக்கீறீர்கள்.
.கோபி ....தி.கோடு...

9/28/09

ஹைக்கூ ..2

பட்டு சென்டரில்
பில் தொகை செலுத்தினார்கள்.
கீரை காரம்மாளிடம் பேரம்.
க.கோபி ..தி.கோடு..

8/10/09

முத்தம்

என் கன்னகுழிக்கான
காரணம் - உன்
இதழ்களே......
க. கோபி .. தி.கோடு ...

7/13/09

ஹைக்கூ .1

எங்கள் உணவகத்தில்
குழந்தை தொழிலாளர்கள் இல்லை.
அட்டையை மாட்டியபடி சிறுவன்.
.கோபி.... தி.கோடு ...

7/5/09

நாகரீக பிச்சைக்காரன்

பேருந்து நிறுத்தத்தில்
சார் ...
பசிக்குது சார் ..
என் கால்களை இழுத்தப்படி
இளந்தளிரின் குரல்
இதயத்தில்
நெக இடுக்கில் ஊசி
குத்தியது போல் வலி ...
மனம் குமறியது
'நானும் உன் போல்
பிச்சைக்காரன் தான்'
'நீயோ தட்டுடன்
நானோ பட்டத்துடன் '

க.கோபி தி.கோடு ....